Thursday, June 23, 2022

மாற்றம் அடையாத எந்த சூழலும் பரிமாற்றம் அடைவது இல்லை.

எல்லோருக்கும் விடிகின்ற வானம் தான் இவருக்கும்.அனைவருக்கும் கிடைக்க பெற்ற வரம் தந்த தாய்,தந்தை தான் இவருக்கும்,வானிலை,கால சூழல்,அர்ப்பணிப்பு,திட்டமிடல்,அதற்கான நகர்வு இவைதான் மாற்றம்,இந்த புரிதலை உள்வாங்கி அவர், அவர் உள்ளதின் உளவியலை இயக்க தெரிந்த மனிதன் மற்றவர்களுக்கு பிரம்மிப்புமிக்க மானுடன் ஆகிறான்.அந்த வகையில் சுந்தர் பிச்சை தன்னிகரற்ற ஒரு வரம்.ஆனால் அதே போன்று நாம் எல்லா குழந்தைகளையும் ஆக்க முயற்சிக்க வேண்டாம்.மாற்றம் அடையாத எந்த சுழலும் பரிமாற்றம் அடைவது இல்லை.நாம் அனைவரின் பிறப்பும், இறப்பும்,ஒரு திட்டமிடல் தான்.நாம் ஒருவரை பின்பற்றும் போது மந்தையாகவும்,உள்ளத்தின் உளவியோலோடு பயணிக்கும் போது பிரமிப்புமிக்க மானுடனாக மாற்றம் அடைகிறோம்.

0 comments: