This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, November 5, 2013

அம்மா .....

அம்மா .....
ஒரு கோழி தன் குஞ்சுகளை பொரிப்பதற்காக‌ ஜந்து முட்டை இட்டு அடைகாத்து வாழ்ந்து வந்தது...
அது அதன் குறிப்பிட்ட‌ காலத்தில் தன் குஞ்சுகளை பொரித்தது.... இந்த‌ ஜந்து குஞ்சுகளும்  ஒரே மாதியாக‌ இல்லை நான்கு அம்மாவைப் போலவும் ஒன்று எதற்கும் கிழ்படியாமலும் இருத்தது.......

நான்கும் அம்மாவின் சிறகுகளில் இருக்க ஒன்று மட்டும் தனியாக‌ இருத்தது ..
ஆனாலும் அம்மா அந்த‌ பிள்ளையை தேடிப் போய் ஒவ்வோரு முறையும் பாதுகாத்தது....


திடீர் என்று அவர்கள் வசிக்கும் அந்த‌ ஊரில் ஒரு எரிமலை ஒன்று வெடிக்க‌ போகிறது என்று ஊர் மக்கள் அந்த‌ இடத்தை விட்டு வெளியேறினார்கள் .. உடனே அந்த‌ தாய் கோழி தன் குஞ்சுகளை பாதுக்காப்பு மிக்க‌ இடத்திற்கு கொண்டு சென்றது நான்கும் பாதுக்காப்பு இடதிற்கு கொண்டு போக‌ தன் பெற்ற ஒன்றை மட்டும் விட்டு செல்ல மனம் இல்லை .. எவ்வளவோ எடுத்து சொல்ல‌ அது தன் அம்மாவின் பேச்சை மறுத்து சுற்றிக்கொண்டு இருத்தது........

உடனே அம்மா தன் நான்கு குஞ்சுகளை பர்த்து நீங்கள் வளர்த்து விட்டீர்கள் தங்களை தாங்கள் இனி உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் ...
நான் அந்த‌ குழந்தைக்கு வாழ்க்கையின் நிஜத்தை புரிய‌ வைக்க‌ போகிறேன் என்று சொல்லி விடை பெற்றது... அவமானம் படுத்திக் கொண்டே இருத்த‌ தன் குழந்தையை  இழுத்து தன் சிறகுகளால் முடிக்கொண்டது ... எரிமலை வெடித்து எல்லோரும் இறக்க‌ ...

இந்த தாய் கோழியும் இறத்து போனது.. அதன் கூடுகளின் அடியில் தன் குஞ்சு குழந்தை உயிரோடு  இருத்தது ... தன் அம்மாவின் பினத்தை பார்த்த பிறகு தான் செய்த‌ தவறை எண்ணி வருத்தியது ...

நீதி:  இந்த‌ உலகத்தில் தன்னை கொடுத்து நாமக்காக வாழும் ஜிவன் அம்மா .. என்பதை உணராமால் இருக்க‌ கூடாது ... யாரகிலும் ஒருவர் நமக்கு அறிவரை சொன்னால் கண்டிப்பாக‌ கேட்க முயற்சி செய்ய‌ வேண்டும்.. இருக்கும் பொழுது பாதுக்காக்காத‌ எதுவும் இல்லாத‌ பொழுது வருத்தங்களைத் தரும் .. பொருளாக‌ இருத்தாலும் சரி உயிராக‌ இருத்தாலும் சரி...

வேலை


சுமதிக்கு சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெகுநாளாய் ஆசை. சங்கீத மேதை சரஸ்வதியம்மாள் அவர்களை சந்தித்து எப்படியாவது கேட்டு விட வேண்டுமென்று சென்றாள்.
வாயில்கதவு முதல் ஒவ்வொரு புறமும் இசைகருவிகளின் வடிவம் போல
அமைக்கப்பட்ட சங்கீத வீடு.
உள்ளே செல்ல அனுமதி கிடைத்ததும் வரவேற்பரையில் அமர்ந்தாள்.
"ஹை...ஐ யாம் ஷிவா, சரஸ்வதி அம்மாளின் ஒரே பிள்ளை" -- அறிமுகம் செய்து கொண்டான்.
"என்னை உங்களுக்கு..." என்று இழுத்தாள் சுமதி.
"என்ன இப்படி கேட்டுட்டீங்க,உங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல இருக்கிற செல்வா என்னோட நண்பன்.அவன் வீட்டுக்கு வந்த போதெல்லாம் உங்க பாட்டு கேட்கும். ரொம்ப ஸ்வீட் வாய்சுங்க உங்களுக்கு.அருமையா பாடறீங்க" அருவியாய் பொழிந்தான்.
"என்னை ரொம்ப புகழ்றீங்க.
நான் இங்க வந்ததே உங்க அம்மாகிட்ட சங்கீதம் கத்துக்கலான்னு கேட்கத்தான்" என்று சொல்லி கொண்டிருந்தபோதே சரஸ்வதியம்மாள் மாடியிலிருந்து கீழே வர...
"வணக்கம்மா"
"யாரும்மா நீ?"
"என் பேரு சுமதி. உங்ககிட்ட சங்கீதம் கத்துக்கணும்னு ஆசை. அதான் கேட்க வந்தேன்"
"நான் இப்ப யாருக்கும் சங்கீதம் கத்துத்தர்றதில்லையே"
"இல்லம்மா, எனக்காக நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்"
"நீ என்ன ஜாதி"
"எதுக்கும்மா"
"கண்டவங்களுக்கெல்லாம் நான் கதுதரமாட்டேன்"
"இசையில பெயரும்,புகழும் உள்ள நீங்கல்லாம் ஜாதி பார்த்து பிரிக்க கூடாதும்மா. நிச்சியம் உங்க பேரக் காப்பதுற மாதிரி நான் வருவேன். ஜாதி பார்த்து பாகுபாடு காட்டறது நியாயமில்லம்மா"
"என்ன மிரட்டுறியா?"
"இல்லம்மா...வேண்டுகோள்"
"உனக்கு சங்கீதத்த பத்தி என்ன தெரியும்?"
"ஓரளவு தெரியும்.நிறைய ஆசையும் அக்கறையும் இருக்கு"
"நான் நினைச்சது எனக்கு கிடைச்சிரிச்சு. இனிமே ஓய்வெடுக்கத்தான் இங்கு செட்டில் ஆனேன்.அதனால நீ போகலாம்."
"அம்மா அப்படிச் சொல்லாதீங்க. இது என்னோட ரொம்ப நாள் தாகம். நெஞ்சுக்குள்ள இருக்கிற வெறி. நீங்க கத்துதரலேன்னா நான் போக மாட்டேன். உங்க வீட்ல ஏதாவது வேலை கொடுங்க அப்படியாவது உங்க சங்கீதத்தை கேட்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்"
"ஆக...நீ போறதா இல்லை?"
"ஆமாம்மா"
"சரி...நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதால உனக்கு ஒரு வேலை தர்றேன், செய்யிறியா?"
"செய்யிறேன்...என்ன வேலம்மா?"
"ம்ம் ....என் பையனுக்கு மனைவிங்கிற வேலை, எனக்கு மருமகள்ங்கிற வேலை,செய்யிறியா?"
சுமதிக்கு பேச்சே வரவில்லை திகைப்பில்.
"எனக்குத் தெரியும்மா, என் பையன் செல்வா வீட்டுக்கு போயிட்டு
வந்தப்பெல்லாம், அம்மாஒருபொண்ணு அருமையா பாடுறான்னு உன்னை பத்தியே
புலம்ப ஆரம்பிச்சான். ஆயாம்மா வந்து நீ எங்கிருந்து வந்திரிக்கேன்னு சொன்னதுமே நான் புரிஞ்சிக்கிட்டேன். சும்மா விளையாட்டா சில கேள்விகள் கேட்டேன். என்ன உனக்கு சம்மதமா?"
சுமதி வெட்கத்தில் தலையசைத்தாள்.
பெற்றவர்களின் ஆசியோடு ஒரு நன்னாளில் சுமதி-ஷிவா கல்யாணம் விமரிசையாய் நடந்தது.

கிளிப்பேச்சு


நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள்
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில்
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.
பிறகு...
சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.
சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.
"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.
அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.
அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.
ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.
அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.
கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.
ஹனு கண்களில் நீர் திரள "அ....அம்....மா..." என்று பேச பழகினாள்.

நிறம்


அண்ணா பூங்காவிற்குள் நுழைந்ததுமே புவனாவின் கண்களில் அவர் பட்டு விட்டதால் அவளுக்கு கோபம் தலைக்கேறியது...
நேராய் அவரிடம் சென்று... "நீங்கல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு நாங்க அலங்காரம் பண்ணிட்டு
இருப்போம். நீங்க வந்து பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு
சொல்லிட்டு போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம் மனசுல மன்மதன்னு நினைப்பா?" என்று மூச்சிரைக்க முடித்தாள் புவனா.
அவர் நிதானமாய் தொடங்கினார் ."இப்ப நான் பேசலாமா ? மேடம் நேற்று உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்கத்தான் வர்றேன்னு எனக்கு தெரியாது வீட்டுல கிளம்பசொன்னங்கன்னு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நான் கல்யாணம் பண்ணிகிட்டா கறுப்பான ஒரு பொண்ண தான் கல்யாணம்
பண்ணிக்கனும்னு இருக்கேன். ஏன்னா கறுப்பான பெண்கள் எப்படில்லாம் நிராகரிக்க படறாங்கன்னு எனக்கு தெரியும் . நீங்க அழகா இருக்கீங்க, உங்களுக்கு என்ன விட நல்லா மாப்பிள்ளை, நீங்க சொன்ன மாதிரி மன்மதன் கிடைப்பான். அதனால தான் பிடிக்கலன்னு சொன்னேன். இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் . உங்க அப்பா பேச ஒத்துக்கல ,அதான் வேண்டான்னு சொல்லிட்டேன் " என்று நிறுத்தி நிதானமாய் முடித்தார்.
தன் அவசரத்தனத்தை உணர்ந்து தலை குனிந்தாள் புவனா
" சாரி சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு தெரியாம கோபப்பட்டுட்டேன்.இப்ப உங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு என்னை கட்டாயம்
நீங்க கூப்பிடனும்" என்று கண்களை துடைத்து வெளியேறினாள்.

சோதிடனைக் கொன்ற கதை(தெனாலிராமன் கதை)

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்

நீதிக் கதைகள் 03

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன.
அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால்
பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது.
அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:
"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது.
பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது
செத்துப் போய்விட்டது.
நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

நீதிக் கதைகள் 02

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன்
குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து
அனுப்பியது சிங்கம்.
கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி
கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி
சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப்
போனது.
சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி
சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ
சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: :பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள்
குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி
விட்டேன்.
எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.
நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

நீதிக் கதைகள்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

ஏலம்


பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார்.
அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.
மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.
மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.

ஒரு யோசனை சொல்ல வேண்டும். காரியங்களை வேகமாகச் செய்வது எப்படி?”
“என்ன பிரச்னை? எதற்குக் கேட்கிறாய்?”
“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”
அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்னை என்னவென்று குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
’ஒரு காக்காவுக்கு தண்ணீர் தாகம் அதிகமாயிருந்தது. அங்கேயும் இங்கேயும் அலைந்து பார்த்தது. எங்கேயும் கண்களில் தண்ணீர் தட்டுப்படவில்லை. அப்போது ஒரு வீட்டு மொட்டை மாடியில் ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. உடனே அங்கே பறந்து சென்று தண்ணீர் குடிக்க முயன்றது. ஆனால் பாவம், அந்தக் குடுவையின் அடியில் தண்ணீர் இருந்ததால் காக்காவுக்கு எட்டவில்லை. என்ன செய்வதென்று காக்கா யோசித்தது.
அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. இதே போன்ற சூழலில் ஒரு புத்திசாலி காக்கா சிறு கற்களைக் கொண்டு வந்து குடுவையில் போட்டு நிரப்பி த ண்ணீரை மேலே கொண்டு வந்து குடித்தது காக்காவின் ஞாபகத்தில் இருந்தது. தானும் அதே போல் செய்ய நினைத்தது. பக்கத்தில் பார்த்தது. சிறு சிறு கற்கள் இருந்தன. அவற்றை கவ்வி எடுத்து வந்து குடுவைக்குள் போட்டது. நான்கைந்து கற்களைப் போட்டிருக்கும். தண்ணீர் அவ்வளவாக மேலே ஏறவில்லை. அதற்கு மேல் கற்களைப் போட காக்காவுக்கும் பொறுமை இல்லை.
இப்படி ஒவ்வொரு கல்லாக போட்டு எப்போது தண்ணீரை உயர்த்தி எப்போது குடிப்பது என்று கவலைப்பட்டது. வேகமாய் நீரை உயர்த்த அதற்கு ஒரு யோசனை தோன்றியது. சிறு சிறு கற்களாய் போட்டு நீரை உயர்த்துவதைவிட ஒரு பெரிய கல்லை கொண்டுவந்து போட்டால் சட்டென்று நீர் உயர்ந்துவிடுமே என்று நினைத்தது.
அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை கஷ்டப்பட்டு எடுத்து வந்து மேலிருந்து கண்ணாடிக் குடுவைக்குள் போட்டது. அந்தக் கல் பட்டதும் குடுவை உடைந்தது. தண்ணீர் சிதறி யாருக்கும் பயன்படாமல் ஓடியது’
இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டால் என்னவாகும் என்பது வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்குச் சொன்ன
WIN மொழி:
பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.