This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, December 14, 2013

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை
***********************************
அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது
*********************************
நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா.
**********************************
உன்னை கண்டேன் என்னை திண்டேன்
***********************************
நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு

பத்தும் பலதாய் வரும்

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --
*********************
பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
பத்திரிக்கை -
ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--
******************
வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --
*****************
பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --

நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை
கருணையோடு இருந்தால் போதும்
**********************
நடப்பு நேரத்தில் உதவுவதால் தான் நட்பு என்கிறோம்
*********************
நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்
************************************
தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு
***********************************
இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு
********************************
அவள் அழகில்லை ஆனால் அழவைப்பாள்
*********************************
நீ அதன் பின் பிரிந்தாய் எந்த இரவும் சிரிக்கவில்லை
******************************
என்னிடம் நீ இருக்கும் போது நான் எங்கே ...?
******************************
காதலின் வானவில் நீ பலகுணம் காட்டுகிறாய்
******************************
நீ சுடர் அழகாகவும் ஆபத்தாகவும் இருக்கிறாய்
*****************************
நீ நிழல் விலகுகிறாயுமில்லை பேசுகுறாயுமில்லை
******************************
நீ சொல்லாவிட்டால் என்ன உன் முகம் சொல்லுகிறதே என்னை பிடிக்கவில்லை என்று
******************************
காதல் கதவை திறக்கமுடியாமல் தொலைந்த சாவி நீ
*******************************
அவள் முடிக்கும் இடத்தில் நான் காதலை தொடர்கிறேன்
****************************

ஓஷோ சொல்கிறார்

ஓஷோ சொல்கிறார்
எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.

ஓஷோ சிந்தனைகள்

ஓஷோ சிந்தனைகள்
******************************
கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.
**********
முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.
**********
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
**********
வாழ்க்கை ஒரு புதிர்.ஏன் என்பதில்லை.குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.அது அப்படியே இருக்கிறது.எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.அது அங்கே இருக்கத்தான் செய்யும்.ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?நடனமாடலாமே?பாடலாமே?அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?
**********
இன்னொரு நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தை விடவா அந்த நரகம் மோசமாக இருக்கப் போகிறது?
**********

நபி மருத்துவம் திராட்சை

நபி மருத்துவம் திராட்சை
**************************************
திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலி) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.
உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.
சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்)
உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.
எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலி) என்பவர் கேட்டார். …குடிக்க வேண்டாம்† என்று அதற்கு பதில் கிடைத்தது.
திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத்திர்மிதீ)
சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்ப தில்லை. (அபூநவீம் பதஹுல் கபீர்)
திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி நாயகம் தெளிவாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம். 100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.
திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

நபி மருத்துவம் - ஜவ்வரிசி

நபி மருத்துவம் - ஜவ்வரிசி
****************************
இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.
பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் "தல்வீணா" என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை "தல்வீனா" கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம்.
சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க "தல்வீனா" கஞ்சியைக் குடிக்க பெருமானார் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். முகத்தைத் தண்ணீரால் கழுவினால் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல் "தல்வீனா கஞ்சி" வயிற்றைச் சுத்தம் செய்கிறது என்று பெருமானார் கூறியதை ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
போர்க்காலத்தில் அரபு ராணுவ வீரர்கள் பார்லியையும், பேரீச்சம்பழங்களையும் உடன் கொண்டு செல்வார்கள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஊட்டச் சத்தும், புத்துணர்வும் கிடைக்கின்றது என்று அரேபியர்கள் கூறுகின்றனர்.
ஒரு பங்கு பார்லி, ஐந்து பங்கு தண்ணீர் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து அது கால் பாகமாகச் சுண்டிய பின் பயன்படுத்தலாம் என்று இப்னு கய்யூம் (ரஹ்) கூறியிருக்கிறார்.
சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதை ஜாதுல்மாத் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இறைவே தங்களான தவாரத். இஞ்சீல் ஜபூர் ஆகியவைகளில் ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
யுனானி மருத்துவம்
ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர்த்தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம். மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்

என்னை ரசிக்கும் நான் ....!!!

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..
ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ...
இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் ..
புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் ..
உணர்வை தூண்டும் செவ்வானம் ...
உருவம் மாறிய உறைபனி ...
உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ...
உண்ண மறக்கும் வேரும் மரமும் ...
வெயில் கால மழை ...!!!
ஓடை ஓரத்தில் முளைத்த காளான் ..
ஒற்றையில் வாழும் ஒருவழி மண்பாதை ..
ஒருநாள் வாழும் உயிரிணம் ..
ஓசை எழுப்பாத இரவு வானம் ...
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைநீர் ...
வான் கண்ணீர் மயிலாட்டம் ..
மழைநேர சுடும் தேநீர் ..
கண்களில் விழும் ஒற்றை மழைத்துளி ..
போர்வையை தேடும் குளிர் காலம் ...
மாயம் காட்டும் கடல் பெரு அலை ....
தலையில் விழும் முதல் மழைத்துளி
உரசிப்போகும் ஊடல் காற்று ....
விழிகை ஓயவைக்கும் இளங்காற்று ...
இன்னுமொருமுறை தூங்கா சொல்லும்
கருமேக வான் ....
ஒற்றைப்பாதை சைக்கிள் ஓட்டம் ..
உறங்கும்போது மெல்லிய பாடல் ...
தடக்கி விழுந்து சிரிக்கும் கனவு ...
கனவால் எழுந்து முழிக்கும் முழி ...
நவரத்தினத்தையும் தோற்கவைக்கும்
குழந்தை சிரிப்பு ...
ஒற்றை கிளை மரங்கள் ..
நிஜம் தேடும் உள்ளங்கள் ..
உதடுகள் விரியாத சிரிப்பு ...
ஒற்றைத்துளி கண்ணீர் ..
அலட்டல் இல்லாத அரட்டை ...
அசட்டை இல்லாத சேட்டை ...
அச்சம் இல்லாத அடிதடி ..
சலனம் இல்லாத உள்ளம் ...
சொர்க்கம் தோற்கும் தாய் மடி ..
அறிவுறை சொல்லும் தந்தை ...
சொல்லாமல் எற்படும் வலிகள் ....
சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...
நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...
சோகத்தில் சிரிக்கும் உதடு ...
கண்ணீரில் மறையும் கண்கள் ...
விரும்பி ஏற்ற காயங்கள் .......
துன்ப நேர தனி சிறை ...
அளவில்லாத இயற்கை கற்பனை ....
மற்றவர் விரும்பும் சிறு சாகசங்கள் ....
மழைத்துளி வெட்டும் விரல்கள் .....
என்னை வெறுப்பவர்கள் ...
எதிர்பார்த்து நிற்கும் அடுத்த நிகழ்வு ...
ஏடறிவு தந்த ஆசிரியர் ..
குளிர் கால சூரிய உதயம் ..
வெயில் கால சந்திரா உதயம் ..
புற்கள் அணிந்த மலைசாயல் ...
மின்சாரம் இல்லாமல் ஒளிரும் விண்மீண்கள் ...!!!
இருட்டில் ஓட்டை வழி சூரிய ஒளி ...
நதியில் வருகைதரும் இலைப்பயணம் ...
வர்ணம் சேர்க்கும் வண்ணாத்தி பூச்சி ...
காலையில் பனித்துளி நனைந்த தாமரை ...
நறுமணம் வீசும் மல்லிகை ...
முற்கள் நிறைந்த ரோஜா ...!!!
கூட்டாக உணவு உண்ணும் தேனீ கூட்டம் ...!!!
உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
எண்ணை தரும் சூரிய காந்தி ...
எண்ணிடும் நிமிடங்கள...
என்னை தோற்கவைக்கும் வர்ணங்கள் ..
எங்கும் பரவும் இயற்கை இசை ...
சத்தமற்ற ரயில் பயணம் ...
நெரிசல் நேர வேகவாகனப்பயணம்....
நெகிழ வைக்கும் திறப்படங்கள் ...
ஆயுளை கூடும் நகை சுவை ...
சிலிக்க வைக்கும் பாடல்கள் ...
விழி விருந்துதரும் நடனங்கள் ...
ஓடும் நீரில் காகித கப்பல் ..
வீசும் காற்றில் பறக்கும் பட்டம் ...
நான்கு சுவருக்குள் விளையாடும்
துடுப்பாட்டம் ...
கண் மயக்கும் காவியங்கள் ...
காதல் கூறும் கதைகள் ..
கண்கள் சொல்லும் கவிதை ...
உணர்வை உருக்கும் ஓவியம் ...
என்னை ரசிக்கும் நான் ....!!!

பழமை என்றால் சிறுமையோ ...?

பழமை என்றால் சிறுமையோ ...?
****************************
வாடி
விழுந்த மலரொண்டின்
சோகக்கதை கேளீர்
வாடி விழுந்தது என் குற்றமா ..?
தாங்கி வைத்திருந்த காம்பு
தள்ளி விட்டது குற்றமா ...?
இளமையாக இருந்த போது
உவமைக்கு என்னை
பயன்படுத்திய -கவிஞரே
பதில் கூறுங்கள் .....!!!
தேய்ந்து
அறுந்த செருப்பொன்றின்
சோகக்கதை கேளீர்
தேய்ந்தது என் குற்றமா ..?
தேய்த்தவர் கால் குற்றமா ...?
என் சோடியை இழந்த நான்
தெருவோரத்தில்
வீசப்பட்டுள்ளேன் -தவிக்கும்
என் மனசை யாரறிவார்
பராபரமே ....!!!
கிழிந்த சட்டையின்
சோகக்கதை கேளீர்
கிழிந்தது என் குற்றமா ...?
கிழிக்க வைத்த உடலின்
வியர்வை குற்றமா ...?
உடலுக்கு அழகுசெய்த
என் வாழ்க்கை இப்போ
துடைப்பு துணியாக
மாறிவிட்ட என் வாழ்க்கை ...!!!
பழமையானால் பாராமுகம்
காட்டும் எம் சமுதாய
பாரம் பரியம் -இதில் மட்டும்
பழமை பேணும் கோட்பாட்டை
காலத்தால் கடைப்பிடிப்பது
விந்தையிலும் விந்தைதான் ...!!!