முப்பது வருடங்க்களின் ...
புள்ளிப்புள்ளியாய் நிறைய ..
சின்ன சின்ன நினைவுகள் ...
பாடசாலை இடைவேளையில் ..
பக்கத்து வீட்டு மாமரம் ...
படாத பாடு படும் ...
பூ பிஞ்சு காய் என்று பாராமல் ..
எல்லாம் கீழே விழும் ...
மாமரத்துக்கு வாயிருந்தால் ..
கண்டபடி பேசியிருக்கும் ...
எம்மைக் கண்டால்...
அணில்களும் சாபமிடும் ..
அதுகளின் உணவிலும் ...
கைவைத்தவர்கள் நாங்கள் ....
உச்சியில் ஒருகாய் இலைக்குள் ..
மறைந்திருக்கும் ....
சாவால்விட்டு.விழுத்துவோம் அதனை ..
எத்தனைநாள் எத்தனை ஓடுகள் உடைப்பு ..
அத்தனையும் வாட்டுகிறது இப்போ ...!!!











