Sunday, January 19, 2014

தாயின் !!!

தாயின் கருவில் இருக்கும் 
குழந்தையின் குரல் சன்னமாய் 
கேட்கிறதே ! சற்று உற்றுத்தான் 
கேட்டுப்பார் மானிடனே !
உலகத்திற்கு  வந்துவிட்டால் 
எனக்கு இல்லை பாதுகாப்பு 
என்றே புலம்பி தவிக்கிறது 
சாத்திக்கப் பிறப்பாய் என்றே 
தவம் இருக்கிறாள் தாய் 
சாதிக்காக  தலை சரிக்க 
துடிக்கின்ற சாத்தான்களை 
எண்ணி அஞ்சுகிறதாம் பிஞ்சு 
தாலாட்ட அன்னை இருக்க 
ஆளாக்க தந்தை இருக்க 
அரவணைக்க உறவு இருக்க 
கூடி மகிழ நட்பு இருக்க 
வாழ்வை ரசிக்க காதல் இருக்க 
சுமந்த தாயின் கனவுகளை 
வண்ணமாக்க ஆயத்தமாய் 
ஆனந்தமாய் வரத்துடிக்கிறேன் 
அத்தனையும் விஷக்கிருமிகள் 
ஊடுருவி நாசமாகிப்போச்சே 
ஊழல் இல்லா உலகமிதுன்னு 
உத்திரவாதம் யார் தருவார் ?
இந்த புயலுக்கும் சூரவளிக்கும்
கருவிலேயே கதி கலங்கி  
நல்ல செய்தி வரும் வரை 
இந்த பிறப்பை தடை செய்ய 
இறைவனிடம்  இறைஞ்சுகிறோம்
இருட்டறையில் ஈனக்குரல் 
இரக்கம் கொள் மானிடா 
காயத்தை கண்ணீரை மாற்றிவிடு

0 comments: