Sunday, January 19, 2014

ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

நான் திரிந்த பாதை ...
 நான் ரசித்த பாதை ...
 அழகான இருபுறமும் ...
 அடர்ந்த மரங்கள் ...
 கணவன் மனைவிபோல் ...
 உயரமான குட்டையான அருகருகே ..
 மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..

உரசும் ஊடல் ...!!!

தரையில் வண்ண வண்ண பூச்சிகள் ..
 இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ...
 சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..

இப்போ ....!!!

இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ...
 ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ...
 ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

0 comments: