Sunday, January 19, 2014

சுவரில் கிறுக்காதே ....

சுவரில் கிறுக்காதே ....
 விளையாடும் குழந்தைகளின் ...
 தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
 தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
 வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
 ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
 இன்று நவீன சித்திரம் என்று ...
 கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
 எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
 நம்வீட்டில்.....???
 நம்பிக்கை வார்த்தை ...!!!

0 comments: