This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, November 8, 2016

மோடி!!!

திரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார மேதைகளாக இருக்கிறார்கள். 

பணத்தை ஹவாலாவில் பதுக்கியிருப்பார்கள். தங்கமாக மாற்றியிருப்பார்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்களை முடக்குவதால் சிறு குறு வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அடித்து நொறுக்குகிறார்கள். மோடியை நாகரிக கோமாளி என்றெல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள். மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலை தேவையற்றது. அவகாசமே தராமல், செய்தியைக் கசியவிடாமல் வைத்திருந்து ஒரே இரவில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது லேசுப்பட்ட முடிவில்லை. தைரியமான, அசதாரணமான முடிவு இது.

ஹவாலா என்பது இந்திய ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் பதுக்குவதில்லை. இங்கேயிருக்கும் புரோக்கரிடம் நூறு கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணத்தை அவன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் கைகாட்டுகிற வெளிநாட்டு ஆளுக்கு நூறு கோடி ரூபாய்க்கான அந்நாட்டுப் பணத்தைத் தரச் சொல்லி அங்கேயிருக்கும் ஹவாலா புரோக்கரிடம் நாம் பணம் கொடுத்து வைத்திருக்கும் புரோக்கர் சொல்வான். ஆக, ரூபாய் நோட்டுக்கள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

இன்றைக்கு ஒவ்வொரு அமைச்சரும் மாதாந்திர தவணையாக எவ்வளவு ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கணக்கு யாருக்காவது தெரியுமா? அரசு அதிகாரிகளின் மாறுதலுக்காகவும் பணி ஆணைகளுக்காகவும் முழுவதும் கை மாறுகிற தொகையின் அளவு தெரியுமா? கணக்கில் வராத கயமைத் தனங்கள் நம்மைச் சுற்றிலும் பல்லாயிரம் கோடிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை அத்தனையும் உடனடியாக பொருட்களாக மாற்றப்படுவதில்லை. தாய்லாந்தில் தீவு வாங்கியது, தலைநகரில் தியேட்டர் வாங்கியது, விவசாய நிலங்களாக வாங்கிப் போட்டது, டிவி சேனல் தொடங்கியது போக இன்னமும் தீர்க்கப்படாத கணக்குகள் ஏகப்பட்டவை இருக்கும். குறைந்தபட்சம் கணக்கு தீர்க்கப்படாத தொகைளுக்காவது பாதிப்பை உருவாக்குவது அவசியமில்லையா?

ஆண்டவன், ஆள்கிறவன் என எல்லோருமே கொள்ளையர்கள்தான்.

தண்ணீர் தொட்டியின் மூடிக்குக் கீழாக உறையை வைத்து அதில் பணக்கட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் சினிமாக்காரர்களைத் தெரியும். பாழடைந்த மோட்டார் அறையில் பழைய சாக்குகளில் கட்டி பணத்தைக் கட்டி வைத்திருக்கும் மிராஸ்களைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சில கோடிகள் மட்டுமே. கரூரில் சிக்கிய அன்புநாதன் மாதிரியான மனிதர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். குடோன்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்றன. இங்கே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே அயோக்கியர்கள் இல்லை. வியாபாரிகளும்தான். ஊர்ப்பக்கம் எந்த நகைக்கடையிலும் துணிக்கடையிலும் டெபிட் கார்டை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு முதல் ஐந்து சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்பார்கள். காரணம் அட்டை வழியான பரிமாற்றத்தைக் கணக்கில் காட்ட வேண்டும். பணமாக வாங்கிக் கொண்டால் அந்தப் பிரச்சினை இல்லை. ஒரு கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைக் கணக்குக் காட்டினாலும் கேட்க ஆளில்லை. இரண்டு பவுன் நகை வாங்கினாலும் ஐம்பதாயிரம் ரூபாயை நோட்டாகத்தான் கொடுக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் சர்வசாதாரணமாக ஐநூறிலிருந்து ஆயிரம் பவுன் விற்பார்கள். கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம். ஜவுளிக்கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. எத்தனை மருந்துக் கடைகளில் பில் கொடுக்கிறார்கள்? தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் கணக்கில் வராத வருமானம் ஒரு நாளைக்கு எவ்வளவு? 

சிறு வியாபாரியோ, குறு வியாபாரியோ- மறைத்துச் சம்பாதித்தால் அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கறுப்புப் பணம்தான். தெரிந்தோ தெரியாமல் நாட்டின் பொருளாதார முதுகெலும்பில் மெல்ல மெல்ல அரிப்பை உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவது அவசியமான செயல் இல்லையா? சேர்க்கைக்காக கல்லூரிகளில் கொழித்த பணம், பருப்பு பதுக்கியது, அரிசி பதுக்கியது, நில புரோக்கர்கள், தனியார் மருத்துவமனைகள் என்று எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு வெள்ளையும் சுள்ளையும் தலையிலும் பெரும் பாறாங்கல்லை தூக்கி வைத்து அமுக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு.

ஆயிரம், ஐநூறை சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறிய மனிதர்கள்தான் பதறுகிறார்கள். கோடிகளில் சுருட்டி வைத்திருக்கும் பெரிய மனிதர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். நமக்குத் தெரிவதில்லை. புழுங்கட்டும். தவறேதுமில்லை.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை முடக்குவது என்கிற திட்டத்தின் காரணமாக இந்தியப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று சில சமூக வலைத்தள பொருளாதார மேதைகள் எழுதியிருந்தார்கள். இந்தியாவில் இந்தியாவில் புழங்குகிற கள்ள நோட்டுக்கள் எவ்வளவு என்று கூகிளில் தேடிப் பார்க்கலாம். ரிசர்வ் வங்கி இருபத்தொன்பது ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாயை அச்சிட்டால் முப்பத்தொன்பது ரூபாய் செலவு செய்து அதே மாதிரி தொகையை அச்சிட்டு நானூறு ரூபாய் வரைக்கும் விற்று இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுகிறார்கள். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய வருமானமே இதுதான் என்கிறார்கள். 

ஆயிரமாயிரம் கோடி ரூபாய்த் தாள்கள் இந்தியாவில் கள்ள நோட்டுக்களாகத்தான் புழங்குகின்றன. விலையுயர்வுக்கும், பண வீக்கத்துக்கும் இவைதான் பெரும் உதவியைச் செய்கின்றன. எதிர்காலத்திலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரக் கூடும் என்றாலும் இதுவரை சுற்றிக் கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான கோடித் தாள்களை ஒழித்துக் கட்டுவதற்கு வேறு உருப்படியான வழியொன்றைச் சொல்லிவிட்டு பொருளாதாரம் குறித்துப் பேசலாம்.

‘இனி ரெண்டு நாளைக்கு ஏழைகள் என்ன செய்வார்கள்’ என்று பொங்கல் வைக்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஐம்பது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருள் எழுபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் போது ஏழைகள் பாதிக்கப்படுவதில்லையா என்றும்தான் கேட்கலாம். இந்த இருபது ரூபாய் விலையுயர்வுக்கு என்ன காரணம்? பதுக்கலும் கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் இல்லையா? ஏதாவதொரு வகையில் யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும்? மோடியின் அரசாங்கம் கட்டியிருக்கிறது.

இப்படி திடீரென அறிவிப்பு செய்தால் எல்லோருக்குமே கஷ்டம்தான் மறுக்கவில்லை. வீட்டுச் செலவுக்காக இரண்டு ஐநூறு ரூபாய்களை வைத்திருப்பவர்கள், மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்று பணமாக வாங்கி கையில் வைத்திருப்பவர்கள், பணியாளர்களுக்கு சம்பளமாகக் கொடுப்பதற்கென சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் சிரமம்தான். ஆனால் இப்படியான அதிரடியான முடிவுகளை எடுக்கும் போது தற்காலிக பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

நம்மிடம் கைவசம் இருக்கிற பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் PAN அட்டை மற்றும் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டியிருக்கும். இதில் ஏதேனும் தகிடுதத்தங்கள் நடக்குமா என்று கணிக்க முடிவதில்லை. ஏதாவது ஓட்டைகள் இருக்குமா என்று தெரியவில்லை. இருக்கக் கூடும். ஆனாலும் கூட இந்த தைரியமான முடிவை வரவேற்கத் தயங்க வேண்டியதில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

இம்முடிவின் குறுகிய கால நீண்டகால விளைவுகளைப் பற்றி உண்மையான பொருளாதார நிபுணர்கள் விரிவாக எழுதுவதையும் விவாதிப்பதையும் கவனிப்பதற்காகக் காத்திருக்கிறேன்.

மற்றபடி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மோடி எதிர்ப்பு என்கிற அரசியல் அடையாளங்களையும் நம்மிடம் இருக்கும் ஐநூறு ஆயிரங்களையும் மறந்துவிட்டு யோசித்தால் இதை வரவேற்கத் தோன்றும் என்றுதான் நினைக்கிறேன். சாமானியனாக எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தமிழக தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் மோடி இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக காலில் விழுந்திருப்பேன். 

மோடிக்கு வாழ்த்துக்கள். 

Monday, June 27, 2016

Hiphop Tamizha - Takkaru Takkaru (Official Music Video)

Saturday, January 10, 2015

கவிதைகள் 1!!!

தகுதி இல்லை
விழுந்து விட்டேன்
பதவி கிடைத்தது

@@@

நான் பணக்காரன்
பாலில் குளிப்பேன்
சுவாமி சிலை

@@@

நான் இரட்டை பிறவி
உருவத்தில் வேறுபாடில்லை
முன் கண்ணாடி

@@@

சின்ன உரசல்
உடல் சூடாகியது
தீக்குச்சி

@@@

அழகில் கிள்ளினேன்
மயங்கி விழுத்தது
மலர்

கவிதைகள்!!!

சுவருக்குள்  சண்டை
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி

$$$

குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்

$$$

உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி

$$$

பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்

$$$

கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு

Tuesday, September 16, 2014

எறும்பு!!!

செத்துப்போன பட்டாம்பூச்சியை 
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும் 
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!

Monday, September 15, 2014

கிளி!!!

சீட்டெடுத்து பழகிய கிளி 
மறந்தே போனது 
பழம்கொத்த!!!

Sunday, September 7, 2014

நாணயம்!!!

உன்னால் மட்டும்

செலவழிக்க முடிந்த

நாணயம் நான்!!!

Saturday, September 6, 2014

புன்னகை!!!

பிரியமுடன்

மகிழ்ச்சியை வாங்கி

புன்னகையை

அலங்கரித்துக் கொள்!!!

மரம்!!!


மரங்கள் பற்றியும் 
மழை பற்றியும் 
பேச,எழுத நேரமிருக்கும் 
நமக்குத் தான்,
நடுவதற்கும் 
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை!!!

மழை!!!


மழையில் நனைந்தது மரம்

தலை துவட்டியது காற்று!!!