This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, February 7, 2021

சொர்க்க_வியாபாரம்

*#சொர்க்க_வியாபாரம்*

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.

*#ஓஷோ*
#FROM_UNCONCIOUSNESS_TO_CONCIOUSNESS #OSHO
#Dont_Follow_Me_Because_I_am_Lost_Myself

Saturday, February 6, 2021

பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் நாம் முதலில் அக்கறை கொள்ள வேண்டும், தீர்வு என்ன என்பதை அல்ல; அது பின்னர் வரும்.

நம்மில் பெரும்பாலோர் ஏதாவது செய்ய விரும்புகிறோம், ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு நம்மை ஈடுபடுத்த விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக அது அதிக குழப்பத்திற்கு, அதிக பிளவுக்கு வழிவகுக்கிறது. 

நாம் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும்; பிரச்சினையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்ல, ஆனால் முழு வாழ்க்கையிலும் - அலுவலகத்தில், குடும்பத்தில், அன்பில், பாலியலில், முரண்பாடு, லட்சியம் மற்றும் மரணம் - எல்லாம் பிரச்சனையாக உள்ளது - இவை எல்லாவற்றையும் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆழ்ந்த பிரச்சனைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - கடவுள் என்று ஒன்று இருக்கிறதா, உண்மை என்று ஒன்று இருக்கிறதா - நீங்கள் எந்த பெயரையம் அதற்கு கொடுக்கலாம். 
இந்த பிரச்சனைகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது தான் நமக்கு சிரமமாக உள்ளது - 

ஏனென்றால் ஒரு பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற நாம் மிகவும் பழக்கமாகிவிட்டோம்; எல்லா சிக்கல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நாம் காண்பதில்லை.  எனவே ஒரு முழுமையான உளவியல் புரட்சியைக் கொண்டுவருவது -  பொருளாதார அல்லது சமூகப் புரட்சியை விட - மிக முக்கியமானது என்று தெரிகிறது. 

ஏனென்றால் பிரச்சினைகள் மிகவும் ஆழமானவை - ஒரு குறிப்பிட்ட குழுவில் சேருவது, தியானம் செய்வது, ஒரு குகைக்குள் வாழ்வது, ஜென் அல்லது யோகா கற்றுக்கொள்வது - இவை எல்லாவற்றையும் விட ஆழமானது.

நம்மில் பெரும்பாலோர் முன்னெடுக்கப்பட்ட முடிவுகளுடன், கருத்துகளுடன், கணிப்புகளுடன் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். எனவே, பார்ப்பதில் சுதந்திரமில்லை; உண்மையில் உள்ளது என்ன என்பதைக் கவனிக்க நமக்கு சுதந்திரமில்லை. மனம் சுதந்திரமாக இருக்கும்போது, ​​பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்து, பின்னர் அந்த கவனிப்பிலிருந்து புரிதல் வருகிறது. 

அந்த புரிதல் தான் ஆற்றல்.

அந்த கவனிப்பு தான் செயல். 

~ ஜே.கிருஷ்ணமூர்த்தி 
1st Public Talk
At University Of California, Berkeley - 3rd February 1969.
"You are the World" புத்தகத்திலிருந்து (Chapter 4)
#jkrishnamurti

இயற்பியல், வேதியியல் என்பவைபொருள்முதல்வாத அறிவியல்.இவை தனித்தவை. ஆய்வகங்களில் இவற்றின் கோட்பாடுகளை சரி பார்க்க முடியும்ஓர் ஆய்வை 40 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் 100 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் ஒரே முடிவைத் தரும்.எக்கனாமிக்ஸ் என்ற பொருளியல் அப்படிப்பட்டதல்ல. இது பொருள்முதல்வாதம், கருத்து முதல் வாதம் இரண்டின் கலவை. மேலும் மானிட இயல்பை சார்ந்தது.ஆளுக்கோர் ஆப்பிளை சாப்பிடச் சொல்லி இரு நபர்களிடம் கொடுத்தால் ஒவ்வொருவரும் அடையும் மகிழ்ச்சி, திருப்தி யைத் துல்லியமாக அளவிட முடியாது.

இயற்பியல், வேதியியல் என்பவைபொருள்முதல்வாத அறிவியல்.இவை தனித்தவை. ஆய்வகங்களில் இவற்றின் கோட்பாடுகளை சரி பார்க்க முடியும்ஓர் ஆய்வை 40 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் 100 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் ஒரே முடிவைத் தரும்.எக்கனாமிக்ஸ் என்ற பொருளியல் அப்படிப்பட்டதல்ல. இது பொருள்முதல்வாதம், கருத்து முதல் வாதம் இரண்டின் கலவை. மேலும் மானிட இயல்பை சார்ந்தது.ஆளுக்கோர் ஆப்பிளை சாப்பிடச் சொல்லி இரு நபர்களிடம் கொடுத்தால் ஒவ்வொருவரும் அடையும் மகிழ்ச்சி, திருப்தி யைத் துல்லியமாக அளவிட முடியாது.

Tuesday, November 8, 2016

மோடி!!!

திரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார மேதைகளாக இருக்கிறார்கள். 

பணத்தை ஹவாலாவில் பதுக்கியிருப்பார்கள். தங்கமாக மாற்றியிருப்பார்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்களை முடக்குவதால் சிறு குறு வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அடித்து நொறுக்குகிறார்கள். மோடியை நாகரிக கோமாளி என்றெல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள். மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலை தேவையற்றது. அவகாசமே தராமல், செய்தியைக் கசியவிடாமல் வைத்திருந்து ஒரே இரவில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது லேசுப்பட்ட முடிவில்லை. தைரியமான, அசதாரணமான முடிவு இது.

ஹவாலா என்பது இந்திய ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் பதுக்குவதில்லை. இங்கேயிருக்கும் புரோக்கரிடம் நூறு கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணத்தை அவன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் கைகாட்டுகிற வெளிநாட்டு ஆளுக்கு நூறு கோடி ரூபாய்க்கான அந்நாட்டுப் பணத்தைத் தரச் சொல்லி அங்கேயிருக்கும் ஹவாலா புரோக்கரிடம் நாம் பணம் கொடுத்து வைத்திருக்கும் புரோக்கர் சொல்வான். ஆக, ரூபாய் நோட்டுக்கள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

இன்றைக்கு ஒவ்வொரு அமைச்சரும் மாதாந்திர தவணையாக எவ்வளவு ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கணக்கு யாருக்காவது தெரியுமா? அரசு அதிகாரிகளின் மாறுதலுக்காகவும் பணி ஆணைகளுக்காகவும் முழுவதும் கை மாறுகிற தொகையின் அளவு தெரியுமா? கணக்கில் வராத கயமைத் தனங்கள் நம்மைச் சுற்றிலும் பல்லாயிரம் கோடிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை அத்தனையும் உடனடியாக பொருட்களாக மாற்றப்படுவதில்லை. தாய்லாந்தில் தீவு வாங்கியது, தலைநகரில் தியேட்டர் வாங்கியது, விவசாய நிலங்களாக வாங்கிப் போட்டது, டிவி சேனல் தொடங்கியது போக இன்னமும் தீர்க்கப்படாத கணக்குகள் ஏகப்பட்டவை இருக்கும். குறைந்தபட்சம் கணக்கு தீர்க்கப்படாத தொகைளுக்காவது பாதிப்பை உருவாக்குவது அவசியமில்லையா?

ஆண்டவன், ஆள்கிறவன் என எல்லோருமே கொள்ளையர்கள்தான்.

தண்ணீர் தொட்டியின் மூடிக்குக் கீழாக உறையை வைத்து அதில் பணக்கட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் சினிமாக்காரர்களைத் தெரியும். பாழடைந்த மோட்டார் அறையில் பழைய சாக்குகளில் கட்டி பணத்தைக் கட்டி வைத்திருக்கும் மிராஸ்களைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சில கோடிகள் மட்டுமே. கரூரில் சிக்கிய அன்புநாதன் மாதிரியான மனிதர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். குடோன்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்றன. இங்கே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே அயோக்கியர்கள் இல்லை. வியாபாரிகளும்தான். ஊர்ப்பக்கம் எந்த நகைக்கடையிலும் துணிக்கடையிலும் டெபிட் கார்டை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு முதல் ஐந்து சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்பார்கள். காரணம் அட்டை வழியான பரிமாற்றத்தைக் கணக்கில் காட்ட வேண்டும். பணமாக வாங்கிக் கொண்டால் அந்தப் பிரச்சினை இல்லை. ஒரு கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைக் கணக்குக் காட்டினாலும் கேட்க ஆளில்லை. இரண்டு பவுன் நகை வாங்கினாலும் ஐம்பதாயிரம் ரூபாயை நோட்டாகத்தான் கொடுக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் சர்வசாதாரணமாக ஐநூறிலிருந்து ஆயிரம் பவுன் விற்பார்கள். கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம். ஜவுளிக்கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. எத்தனை மருந்துக் கடைகளில் பில் கொடுக்கிறார்கள்? தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் கணக்கில் வராத வருமானம் ஒரு நாளைக்கு எவ்வளவு? 

சிறு வியாபாரியோ, குறு வியாபாரியோ- மறைத்துச் சம்பாதித்தால் அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கறுப்புப் பணம்தான். தெரிந்தோ தெரியாமல் நாட்டின் பொருளாதார முதுகெலும்பில் மெல்ல மெல்ல அரிப்பை உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவது அவசியமான செயல் இல்லையா? சேர்க்கைக்காக கல்லூரிகளில் கொழித்த பணம், பருப்பு பதுக்கியது, அரிசி பதுக்கியது, நில புரோக்கர்கள், தனியார் மருத்துவமனைகள் என்று எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு வெள்ளையும் சுள்ளையும் தலையிலும் பெரும் பாறாங்கல்லை தூக்கி வைத்து அமுக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு.

ஆயிரம், ஐநூறை சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறிய மனிதர்கள்தான் பதறுகிறார்கள். கோடிகளில் சுருட்டி வைத்திருக்கும் பெரிய மனிதர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். நமக்குத் தெரிவதில்லை. புழுங்கட்டும். தவறேதுமில்லை.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை முடக்குவது என்கிற திட்டத்தின் காரணமாக இந்தியப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று சில சமூக வலைத்தள பொருளாதார மேதைகள் எழுதியிருந்தார்கள். இந்தியாவில் இந்தியாவில் புழங்குகிற கள்ள நோட்டுக்கள் எவ்வளவு என்று கூகிளில் தேடிப் பார்க்கலாம். ரிசர்வ் வங்கி இருபத்தொன்பது ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாயை அச்சிட்டால் முப்பத்தொன்பது ரூபாய் செலவு செய்து அதே மாதிரி தொகையை அச்சிட்டு நானூறு ரூபாய் வரைக்கும் விற்று இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுகிறார்கள். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய வருமானமே இதுதான் என்கிறார்கள். 

ஆயிரமாயிரம் கோடி ரூபாய்த் தாள்கள் இந்தியாவில் கள்ள நோட்டுக்களாகத்தான் புழங்குகின்றன. விலையுயர்வுக்கும், பண வீக்கத்துக்கும் இவைதான் பெரும் உதவியைச் செய்கின்றன. எதிர்காலத்திலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரக் கூடும் என்றாலும் இதுவரை சுற்றிக் கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான கோடித் தாள்களை ஒழித்துக் கட்டுவதற்கு வேறு உருப்படியான வழியொன்றைச் சொல்லிவிட்டு பொருளாதாரம் குறித்துப் பேசலாம்.

‘இனி ரெண்டு நாளைக்கு ஏழைகள் என்ன செய்வார்கள்’ என்று பொங்கல் வைக்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஐம்பது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருள் எழுபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் போது ஏழைகள் பாதிக்கப்படுவதில்லையா என்றும்தான் கேட்கலாம். இந்த இருபது ரூபாய் விலையுயர்வுக்கு என்ன காரணம்? பதுக்கலும் கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் இல்லையா? ஏதாவதொரு வகையில் யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும்? மோடியின் அரசாங்கம் கட்டியிருக்கிறது.

இப்படி திடீரென அறிவிப்பு செய்தால் எல்லோருக்குமே கஷ்டம்தான் மறுக்கவில்லை. வீட்டுச் செலவுக்காக இரண்டு ஐநூறு ரூபாய்களை வைத்திருப்பவர்கள், மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்று பணமாக வாங்கி கையில் வைத்திருப்பவர்கள், பணியாளர்களுக்கு சம்பளமாகக் கொடுப்பதற்கென சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் சிரமம்தான். ஆனால் இப்படியான அதிரடியான முடிவுகளை எடுக்கும் போது தற்காலிக பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

நம்மிடம் கைவசம் இருக்கிற பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் PAN அட்டை மற்றும் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டியிருக்கும். இதில் ஏதேனும் தகிடுதத்தங்கள் நடக்குமா என்று கணிக்க முடிவதில்லை. ஏதாவது ஓட்டைகள் இருக்குமா என்று தெரியவில்லை. இருக்கக் கூடும். ஆனாலும் கூட இந்த தைரியமான முடிவை வரவேற்கத் தயங்க வேண்டியதில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

இம்முடிவின் குறுகிய கால நீண்டகால விளைவுகளைப் பற்றி உண்மையான பொருளாதார நிபுணர்கள் விரிவாக எழுதுவதையும் விவாதிப்பதையும் கவனிப்பதற்காகக் காத்திருக்கிறேன்.

மற்றபடி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மோடி எதிர்ப்பு என்கிற அரசியல் அடையாளங்களையும் நம்மிடம் இருக்கும் ஐநூறு ஆயிரங்களையும் மறந்துவிட்டு யோசித்தால் இதை வரவேற்கத் தோன்றும் என்றுதான் நினைக்கிறேன். சாமானியனாக எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தமிழக தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் மோடி இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக காலில் விழுந்திருப்பேன். 

மோடிக்கு வாழ்த்துக்கள். 

Monday, June 27, 2016

Hiphop Tamizha - Takkaru Takkaru (Official Music Video)

Saturday, January 10, 2015

கவிதைகள் 1!!!

தகுதி இல்லை
விழுந்து விட்டேன்
பதவி கிடைத்தது

@@@

நான் பணக்காரன்
பாலில் குளிப்பேன்
சுவாமி சிலை

@@@

நான் இரட்டை பிறவி
உருவத்தில் வேறுபாடில்லை
முன் கண்ணாடி

@@@

சின்ன உரசல்
உடல் சூடாகியது
தீக்குச்சி

@@@

அழகில் கிள்ளினேன்
மயங்கி விழுத்தது
மலர்

கவிதைகள்!!!

சுவருக்குள்  சண்டை
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி

$$$

குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்

$$$

உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி

$$$

பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்

$$$

கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு

Tuesday, September 16, 2014

எறும்பு!!!

செத்துப்போன பட்டாம்பூச்சியை 
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும் 
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!

Monday, September 15, 2014

கிளி!!!

சீட்டெடுத்து பழகிய கிளி 
மறந்தே போனது 
பழம்கொத்த!!!

Sunday, September 7, 2014

நாணயம்!!!

உன்னால் மட்டும்

செலவழிக்க முடிந்த

நாணயம் நான்!!!