This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, January 19, 2014

ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

நான் திரிந்த பாதை ...
 நான் ரசித்த பாதை ...
 அழகான இருபுறமும் ...
 அடர்ந்த மரங்கள் ...
 கணவன் மனைவிபோல் ...
 உயரமான குட்டையான அருகருகே ..
 மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..

உரசும் ஊடல் ...!!!

தரையில் வண்ண வண்ண பூச்சிகள் ..
 இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ...
 சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..

இப்போ ....!!!

இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ...
 ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ...
 ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

சுதந்திரத்தை பற்றி ...

சுதந்திரத்தை பற்றி ...
 கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ...
 முற்றத்தில் வந்து விழுந்த்தது ...
 காகங்களால் கொத்தப்பட்ட ...
 குருவியொன்று ....!!!

எடுத்த குருவியை ...
 மெதுவாக வருடி ...
 முடிந்தளவு பாதுகாத்து ...
 பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ...
 வேண்டாமப்பா ..நிறுத்துங்க ..
 அதை கூட்டில் வளர்ப்போம் ..
 தடுத்தான் செல்ல மகன் ...!!!

வேண்டாம் மகனே ...
 அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது ..
 பறக்க விட்டேன் குருவியை ..!!!

வாடா மகனே ....
 வெளியில் நிற்காதே ...
 பொல்லாத உலகமடா இது ...
 கூறியபடி மகனை அடைத்தேன் வீட்டுக்குள் ..!!!

சுவரில் கிறுக்காதே ....

சுவரில் கிறுக்காதே ....
 விளையாடும் குழந்தைகளின் ...
 தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
 தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
 வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
 ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
 இன்று நவீன சித்திரம் என்று ...
 கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
 எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
 நம்வீட்டில்.....???
 நம்பிக்கை வார்த்தை ...!!!

Sunday, December 15, 2013

அடையாளம்

அடையாளம்
************************
ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.
அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.
அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.
பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!

உதாசீனம்

உதாசீனம்
*****************
ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்கசரியானஇடம்,''என்றான்.
மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.

எனது இலைகள் எங்கே போயின ...?

எனது
இலைகள் எங்கே போயின ...?
எனது
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல்
மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!
காதலுடன்
என் கிளையில் கொஞ்சி
குழாவிய இளம் பறவைகளின்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை
இழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்
நடை தளர்ந்து வரும் போது
நிழலுக்காக வந்து பேசும்
மனிதர்களின் இன்பபேச்சை
கேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்
சின்ன சின்ன முத்துக்களின்
செல்லமான சண்டையையும்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்
கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்
ஊடல் செய்து உறவாடும்
அழகை என் கள்ள கண்ணால்
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!
பட்டுப்போன
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும்
அரித்துக்கொண்டிருக்க
போதாததற்கு குறைக்கு
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!
அதோ
வருகிறது என் பாசக்கயிறு
கோடரி என்ற சாவுகாவி
ஏய் கோடரியே -கவனி
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும்
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே
பயன்படுத்துகிறாய் .....!!!
(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம்
வளர்ப்போம் )

#paypetechnologies
#rameshmuthuvel

வாதத் திறமை

வாதத் திறமை
***********************
ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.
ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.
பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.
அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,''கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.
இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.''என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு வக்கீலை அழைத்தார்.
அவரோ,'நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?'என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

எல்லாம் ஒன்றுதான்.

எல்லாம் ஒன்றுதான்.
*******************************
ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.
அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.
ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

Saturday, December 14, 2013

எனக்கு காதல் அகராதி தான் ...!!!

நீ கோபத்தோடு பேசும்
பேச்சுக்கள் கூட எனக்கு
கவிதை வரிகள் தான் ...!!!
நீ எழுத்து பிழையாக
எழுதிய கடிதங்கள் கூட
எனக்கு காதல் அகராதி தான் ...!!!
****************************
உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து விடுகிறது
வரிகளும் கவிதையும்
உன்னை பார்க்கும் போது
வரமறுக்கிறது
வரிகளும் கவிதையும்
****************************
நீ என்னை விட்டு விலகி
விட்டாய் ....?
எப்போதோ நீ
பரிசளித்த,
நினைவு பரிசில் புதைந்து
கிடக்கிறது,
நம் ஆரம்ப காதல் ...!!!
****************************
உன் வீட்டுக்கு வந்த போது
எனக்கு வைத்த லட்டில்
நீ கடித்து வைத்த லட்டை
நான் எடுத்து சாப்பிட்ட போது
தூரத்தில் நின்று துள்ளி
குதித்த நிகழ்வை
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
************************************
ஒவ்வொரு செல்ல சண்டைக்கு
பின்னரும் நீ ஒரு கள்ள சிரிப்பு
சிரிப்பாயே -அந்த சிரிப்பில்
புதைந்துள்ளது காதலின்
சொர்க்கம் ....!!!
_________________
***********************************
மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!

காதல் எரிகிறது ....!!!

என்னை கண்டதும்
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?
நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!
உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!