This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, January 19, 2014

பெண்டிற்கழகு

உண்டி சுருங்குதல் ...
பெண்டிற்கழகு - என்றார்
என் மூதாதைப்பாட்டி ...!
உண்டி சுருங்குதல் ..
உலகுக்கே அழகு -என்கிறேன் நான்
உணவுப்பொருளின் விலையேற்றத்துக்கு ...
உண்டி சுருக்காமையே காரணம் ..
உற்பத்தி குறைவல்ல

ஞானியை கண்டேன் ...

ஞானியை கண்டேன் ...
கேள்வியை கேட்டேன்....
கலியுகம் என்றால் என்ன ...?
யோகத்தை மறந்து ..
மோகத்தை ...
போகத்தை ...
விரும்புவது -என்றார் ..!
விளங்கவில்லை என்றேன்..
சொல்லுகிறேன் கேள் ..!
காதல் கவிதை ..
சமுதாயக்கவிதை ..
வாழ்க்கை கவிதை ...
ஆன்மீகக்கவிதை...
என்றெல்லாம் எழுதுகிறாய் ...
ஆன்மீகக்கவிதையை ரசிப்பவர்.... ?
மிக மிக அரிதல்லவா ,....?
யோகத்தை மறந்து விடார்களே ..!
கலியுகத்தில் கடவுளை சிறிது நம்பினால் ...
கடலளவு பலன் உண்டு ...
பார்த்துக்கொண்டிருந்தேன் ...
ஞானியை காணவில்லை ...!

கூனல் நிமிர்ந்தது ...

கூனல் நிமிர்ந்தது ...
மனிதனானான் ...
கூனிக்கொண்டே...
போகிறான் ..
கூலியானான்...
கூக்குரல் இட்டு ..
தோன்றியதினம் ...
கூத்தாடிகளின் தினமல்ல ...
கூட்டத்தோடு குரல் கொடுத்தால் ...
கூட்டாக பயனைப்பெருவோம் நாம் ...

திரும்பிப்பார்க்கிறேன் ....

திரும்பிப்பார்க்கிறேன் ....
முப்பது வருடங்க்களின் ...
புள்ளிப்புள்ளியாய் நிறைய ..
சின்ன சின்ன நினைவுகள் ...
பாடசாலை இடைவேளையில் ..
பக்கத்து வீட்டு மாமரம் ...
படாத பாடு படும் ...
பூ பிஞ்சு காய் என்று பாராமல் ..
எல்லாம் கீழே விழும் ...
மாமரத்துக்கு வாயிருந்தால் ..
கண்டபடி பேசியிருக்கும் ...
எம்மைக் கண்டால்...
அணில்களும் சாபமிடும் ..
அதுகளின் உணவிலும் ...
கைவைத்தவர்கள் நாங்கள் ....
உச்சியில் ஒருகாய் இலைக்குள் ..
மறைந்திருக்கும் ....
சாவால்விட்டு.விழுத்துவோம் அதனை ..
எத்தனைநாள் எத்தனை ஓடுகள் உடைப்பு ..
அத்தனையும் வாட்டுகிறது இப்போ ...!!!

தனியார் மருத்துவமனை அவலம் !!!!

கண்டுபிடித்துத் தாருங்கள்!
கருவறையில்
காணாமல் போன‌
என் மகனை-தனியார் மருத்துவமனை அவலம் !!!!

என் வாழ்க்கை

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது
வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

நான் ( ஆணவம் )....

குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல்
குடல் அழுதால் பட்டினி
உடல் அழுதால் நோய்
விதை அழுதால் விரயம்
வீரம் அழுதால் தோல்வி
மானம் அழுதால் இழப்பு
தானம் அழுதால் வறுமை
மனம் அழுதால் மன்னிப்பு
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால் அது நட்பு
'நான்' அழுதால் அது ஞானம்
குறிப்பு ;நான் ( ஆணவம் )....

நிழல் இருட்டில் மட்டும்!!!

இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த
நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
இருட்டில் எங்கோ
ஒளிந்து கொண்டு
வெளிச்சத்தில் நிழலின்
வேலை என்ன ?
பட்டப் பகலில்
பயணத் துணை
யார் கேட்டது?
இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
வெளிச்சத்தில் சேவையும் ..
இருட்டில் விடுமுறையும் ...
எடுக்க நீ என்ன அலுவலக ..
உத்தியோகத்தரா ...???
என்னோடு இருந்து ..
எனக்கே இடையிடையில் ..
கழுத்தறுக்கும் நீ ...
எப்படி என் நிழல் என்பேன் ..??
ஓ அதற்காக தான் நீ ...
முகம் காட்டாமல் ..
இருளாய் இருக்கிறாயா ...???

தாயின் !!!

தாயின் கருவில் இருக்கும் 
குழந்தையின் குரல் சன்னமாய் 
கேட்கிறதே ! சற்று உற்றுத்தான் 
கேட்டுப்பார் மானிடனே !
உலகத்திற்கு  வந்துவிட்டால் 
எனக்கு இல்லை பாதுகாப்பு 
என்றே புலம்பி தவிக்கிறது 
சாத்திக்கப் பிறப்பாய் என்றே 
தவம் இருக்கிறாள் தாய் 
சாதிக்காக  தலை சரிக்க 
துடிக்கின்ற சாத்தான்களை 
எண்ணி அஞ்சுகிறதாம் பிஞ்சு 
தாலாட்ட அன்னை இருக்க 
ஆளாக்க தந்தை இருக்க 
அரவணைக்க உறவு இருக்க 
கூடி மகிழ நட்பு இருக்க 
வாழ்வை ரசிக்க காதல் இருக்க 
சுமந்த தாயின் கனவுகளை 
வண்ணமாக்க ஆயத்தமாய் 
ஆனந்தமாய் வரத்துடிக்கிறேன் 
அத்தனையும் விஷக்கிருமிகள் 
ஊடுருவி நாசமாகிப்போச்சே 
ஊழல் இல்லா உலகமிதுன்னு 
உத்திரவாதம் யார் தருவார் ?
இந்த புயலுக்கும் சூரவளிக்கும்
கருவிலேயே கதி கலங்கி  
நல்ல செய்தி வரும் வரை 
இந்த பிறப்பை தடை செய்ய 
இறைவனிடம்  இறைஞ்சுகிறோம்
இருட்டறையில் ஈனக்குரல் 
இரக்கம் கொள் மானிடா 
காயத்தை கண்ணீரை மாற்றிவிடு

வாழ்கையில் எல்லாமே!!

வாழ்கையில் எல்லாமே மனிதனுக்கு ஏக்கம் தான்!!
சிலர் பசிக்காக வாழ்கிறான்,
சிலரோ ருசிக்காக!!!!!