ஒரு படகில் பல வெளிநாட்டுகாரர்களும்,நமது தமிழ் நாட்டுகாரரும் சென்று கொண்டிருந்தனர்.அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் படகு முழ்க ஆரம்பித்தது.இதனை பார்த்த கப்பல் கேப்டன் இங்க பாருங்க மக்களே,போட் இந்தாண்ட முழ்வ போவுது,அதனால போட்ல கனமான பொருளு எல்லாத்தையும் கடல்ல கடல்ல தூக்கி வீசுங்க என்றார்.இதை கேட்ட அமெரிக்கர்,அவரது நாட்டில் இருந்து கொண்டு வந்த மூட்டைகனக்கான தங்கங்களை கடலில் தூக்கியெறித்தார்.இதனை பார்த்த கப்பல் கேப்டன் இன்னாயா,தங்கத்த தூக்கி கடல்ல போடுற என கேட்க,இதெல்லாம் சர்வசாதாரணம் என்றார் அமெரிக்கர்.அடுத்து இதை பார்த்த ரஷ்யர் தான் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த வைரங்களை கடலில் வீசியெறிந்தார்.இதனை பார்த்த கேப்டன்,இன்னாயா நீயும் வைரத்தூக்கி கடலாண்டா போட்டுகின்ன என்றார்.இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றார் ரஷ்யர்.இதை போலவே அவரவர் தங்களுடைய சொத்துகளை கடலில் விட்டெறிந்து,அதனை சர்வசாதாரணம் என்றனர்.இறுதியாக தமிழனை பார்த்த கேப்டன் நீயும் எதையாவது கடல்ல போடுயா என்க,தமிழன் அருகில் இருந்த ஜப்பான்காரனை யிழுத்து கடலில் போட்டானாம்.அதை பார்த்த கேப்டன் யோவ்,இன்னாயா இது மனுசன கடல்ல தள்ளிட்ட என்க,அன்னாத்தா நம்ம ஊர்ல இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றானாம் தமிழன்.
இச்செய்தி சிரிக்க மட்டுமே,யாரையும் புண்படுத்துவதற்காக பதிய படவில்லை.
இச்செய்தி சிரிக்க மட்டுமே,யாரையும் புண்படுத்துவதற்காக பதிய படவில்லை.







0 comments:
Post a Comment