Wednesday, October 30, 2013

இந்தியன்!!ஆப்பிரிக்கன்!!அமெரிக்கன்!!

ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது.
அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது.
அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது.
இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது.
அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்..

0 comments: