This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 9, 2024

காலத்தால் கடக்க முடிந்த நேரங்களில் தீர்வு எட்ட முடியும் ஒன்றே.

ஒரே நோக்கம் நோக்கத்திற்கான தேடல் எப்படியும் எட்டி விட வேண்டும் என்ற முயற்சி, அதற்கான செயல் பலன்கள். நாளும் நாளும் விரிவடைந்து கொண்டிருக்கிறது அந்த பயணம் சொல்லி தர அனைத்தும் நம் கல்விக்கூடங்களில் கூட கிடைக்காத அறிய பொக்கிஷங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இது போன்ற ஒரு முயற்சிக்காக உங்க வாழ்வியலை தொலையுங்கள் நீங்கள் காணாமல் போகும் வரை அந்த தேடலை முழுமைப்படுத்துங்கள் உங்களுக்கான வெற்றியும் சாத்தியமே! 
காலத்தால் கடக்க முடிந்த நேரங்களில் தீர்வு எட்ட முடியும் ஒன்றே.

#rameshmuthuvel

Sunday, December 1, 2024

"சரி இதோ போறேன்".

இன்னும் விடியாத இரவுகள்.நேற்று அடித்த புயலில் களைத்துப் போன தெருக்கள். வாழ்க்கையும் அப்படி தான் பல முறை பலமாக அடி வாங்கின பிறகு - இதற்கு மேல் தாங்கவே முடியாது என்ற கட்டத்திற்கு மனம் வந்து விடும். தெருக்களின் நிலையும் அப்படித்தான். தேய்ந்து தேய்ந்து ஓடாய் போய் விட்டது. பாவமாக இருந்தது. 

மனித மனமும் உடலும் தாங்கும் வரை தான் தாங்கும். பின்னர் விரக்தி, சோகம், இனம் புரியாத வலிகள். ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு தட்டி விடும். எதையுமே நிதானமாக யோசிக்க வைக்கும். காலையிலேயே மனச்சிதறல்கள்.

ஒருவன் செடிகளுக்கு நீருற்றுகிரான் தினமும் ஆனால் ஏன் என்று தெரியாமலே?

இன்னொருவன் நம் தங்கிய அறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு பிரதிபலன் இன்றி செல்கிறான்.

மற்றொருவன் ஒரு பக்கம் துணிகளை துவைத்து இஸ்திரி போட்டு கொண்டு வந்து தருகிறான்.

ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு புறம் குழப்பம். கலவையான எண்ணங்கள். அதற்குள் இது போன்ற சிந்தனைகளை கலைத்தவாறே - காற்றை கிழிக்கும் குரல். 
 
"பசும்பால் மட்டும் வாங்கிண்டு வாங்க"

"சரி இதோ போறேன்".

படித்ததில் பிடித்தது.

#rameshmuthuvel

Saturday, November 30, 2024

புராதான உதாரணம்!!!

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.

பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்

வீட்டில் தங்கினான்......!!

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!!

யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என

நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,

நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!!

அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!!

அரசன் அந்த நெசவாளியிடம்

"இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!!

குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’

என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது......

‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!!

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!!

இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!!

‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது.

அதன் தொல்லையை சமாளிக்க,

இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’

என்று பதில் சொன்னான்.....!!

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!!

நெசவாளியைப் பார்த்து ,

‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!!

அதனால்,

அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... !!

அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....!!

அதற்கு நெசவாளி சொன்னான்:

‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!!

ஆகவே,

அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள

மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!!

என்னிடம் பாடம் கேட்கும்போது,

அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...??

என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!

நெசவாளி சொன்னான்:

‘‘இது மட்டுமில்லை.

என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!!

வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!

ஒருவன் விரும்பினால் ,

ஒரே நேரத்தில் ,

கற்றுக்கொள்ளவும் ,

கற்றுத் தரவும் ,

வேலை செய்யவும் ,

வீட்டை கவனிக்கவும்

முடியும் என்பதற்கு

இந்த நெசவாளி தான் சாட்சி....!!

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!

தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!

உழைப்பே உயர்வினை தரும்.....!!

அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்.

படித்ததில் பிடித்தது.

#rameshmuthuvel

Friday, November 15, 2024

"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.

அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...

"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...

உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....

ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....

மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

Saturday, December 17, 2022

Financial Inclusion

Financial inclusion in India is a major focus of the Indian government. With over half of India's population excluded from the formal banking system, the government has taken various steps to increase the access of banking services to the unbanked population. This includes initiatives like the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), which opened more than 330 million bank accounts for the unbanked population in India. The future growth of financial inclusion in India is positive and expected to continue in the coming years. According to a report by the World Bank, the number of bank accounts held by Indians has grown from about 200 million in 2014 to over 650 million in 2019, with most accounts opened through the PMJDY. Further, digital payments are also expected to grow rapidly, with the value of mobile payments projected to reach $1 trillion by 2023. The government has also been introducing various initiatives to promote digital payments, such as the Unified Payments Interface (UPI) and the BHIM app, which has helped increase access to digital payment services.

Wednesday, August 31, 2022

வாழ்க்கை

எல்லோரும் தன் வாழ்கையில் மேற்கொள்ளும் பயணம் தான் இருந்தாலும்,இந்த உலகில் அந்த பயணதிற்கும்,அதனுடைய இருகைக்களுக்கும்,எப்போதும் நாம் ஒரு சிறப்பம்சம் கொடுத்து பயணிக்கிறோம்.ஆம் அது நாம் எல்லோருடைய வாழ்க்கை பயணம் தான்,பிறப்பு முதல் இறப்பு வரை எவளோ அற்புதங்கள்,அதிசயங்கள், காலத்தால் கூட சேகரிக்க முடியாத அனுபவங்கள்.நான் எப்போ பிறந்தேன் இறப்பதற்கு எப்போ இறப்பேன் பிறப்பதற்கு.பிறப்பும்,இறப்பும்,நிலையானதா? முடிவானதா?ஒரு விளையாட்டை எடுத்து கொள்ளுங்கள் அந்த ஆட்டம் அன்று மற்றுமே முடிவு பெற்று இருக்கும் ஆனால் மீண்டும் தொடர்கிறது அல்லவா? அப்போ வாழ்க்கை மற்றும் எப்டி முடிவு பெறும்..,

கிருஷ்ணா M.A.RameshMuthuvel.

Tuesday, June 28, 2022

ஃபின்டெக் பயன்பாடுகளுடன்.

கடந்த ஆண்டு [2020], 42% மக்கள் தங்கள் நிதியைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்காக தங்கள் கணக்குகளை ஒருங்கிணைக்க fintech ஐப் பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறினர்.  இந்த ஆண்டு [2021], முக்கால்வாசி மக்கள் தங்கள் கணக்குகளை இணைக்கும் திறன் ஒரு முன்னுரிமை மட்டுமல்ல, தங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு எதிர்பார்ப்பு (76%) என்று கூறியுள்ளனர்.  உண்மையில், ஏறக்குறைய பத்தில் ஏழு பேர் தங்கள் நிதிக் கணக்குகளை ஃபின்டெக் பயன்பாடுகளுடன் (69%) இணைக்க முடியாவிட்டால், வங்கிகளை மாற்றுவது குறித்து அவர்கள் பரிசீலிப்பார்கள்.

 இன்று 79% மக்கள் அவர்கள் பயன்படுத்தும் நிதி பயன்பாடுகள் மற்றும் சேவைகளுடன் தங்கள் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் திறனை மதிக்கிறார்கள்.  மேலும் 83% நிறுவனங்கள் தங்களுடைய தரவைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக (எ.கா. கிரெடிட் ஸ்கோர்கள்) தங்கள் தரவை எங்கு பகிர்ந்து கொள்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள் (எ.கா., ஃபின்டெக் பயன்பாடுகளுடன்).

Sunday, June 26, 2022

இந்த internet explorer கதையும் நம் இறுதி ஊர்வலத்திற்குப் பின் நடக்கும் சம்பவவும் ஒன்றுதான்?

இந்த internet explorer கதையும் நம் இறுதி ஊர்வலத்திற்குப் பின் நடக்கும் சம்பவவும் ஒன்றுதான்?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,
வந்த கூட்டத்தில்
படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..
அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.
இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,
ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,
மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..
நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.
கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது,
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..
மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..
மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?
Change alone does not change.
#paypetechnologies

Saturday, June 25, 2022

சுமக்க விரும்பாத கர்ப்பங்களுக்கு தங்கள் உடலைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில்?

கர்ப்பம் கருக்கலைப்பை விட முப்பது மடங்கு ஆபத்தானது.உலகம்  முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டிய ஒன்று.

கர்ப்பம் தொடர்பான இறப்புகளில் இருபத்தி ஒரு சதவீதம் உயர்வு. கருக்கலைப்பு தடையால் இறக்கும் பெண்களில் சிலர் இப்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்களின் மரணங்கள் மருத்துவமனைகளின் பின்-சந்து நடைமுறைகளால் நடத்த படுகிறது,தாய்,தந்தையின் அமைதியான கவனிப்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் மறுப்பிலிருந்து வரும் தலையீடுகள் தாமதமாகின்றன,அப் பெண்ணின் ஆசைகள் புறக்கணிக்கப்படுகின்றன.அவர்கள் ஒருபோதும் சுமக்க விரும்பாத கர்ப்பங்களுக்கு தங்கள் உடலைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்கள் தொற்றுநோய்கள், ப்ரீக்ளாம்ப்சியா, இரத்தப்போக்கு ஆகியவற்றால் இறந்துவிடுகிறார்கள், மேலும் இந்த மரணங்களை ஒரு சோகமாக ஏற்றுக்கொள்வது கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனை மாபியாவிக்கு கடினமாக இருக்காது.ஆனால் இறுதியாக ஒரு தாயின் உன்னதமான பெண்மை அழிக்கபடுகிறது என்று எத்தனை மானுடர்கள் வருந்துகிறோம்.
#paypetechnologies
#rameshmuthuvel

Thursday, June 23, 2022

பணவீக்கம் என்பது ஏழைகள் மீதான வரி. அழைக்கப்படாத விருந்துக்கு ஏழைகள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?

பணக்காரர்களின் விருந்து முடிந்துவிட்டது, ஏழைகள் பில் செலுத்தி அவர்களை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது.

டாக்டர்கள் உங்களுக்குச் சொல்வதைப் போல, ஸ்டீராய்டு உயிரைக் காப்பாற்றும், ஆனால் நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாது, மேலும் திடீரென்று நிறுத்த முடியாது, அட்ரீனல் சுரப்பிகள் சரிசெய்ய நேரத்தை அனுமதிக்க அதை குறைக்க வேண்டும். பணப்புழக்கம் என்பது பொருளாதாரத்திற்கான ஸ்டீராய்டு. கோவிட் இணைக்கப்பட்ட விநியோக இடையூறுகள், உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் தாக்கம், இவை உலகளாவிய பணவீக்கத்திற்கு குற்றம் சாட்டப்படுகின்றன. US -8.6%.

யார் விலை கொடுப்பார்கள்? பணவீக்கம் என்பது ஏழைகள் மீதான வரி. அழைக்கப்படாத விருந்துக்கு ஏழைகள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? சரி பொருளாதார விளையாட்டு எப்படி அமைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மற்றும் இது திவால் பொருளாதார மந்தநிலையை தூண்டும். நிறுவனங்களை மறந்து விடுங்கள், நாடுகள் கடுமையான வலியை சந்திக்கும் அபாயம் உள்ளது.

#RameshMuthuvel
#paypetechnologies

ஆழ்மன அறிவியல்.

பலமுறை முழுமையாக ஒப்புக்கொண்டு இருக்கிறேன்.
குறிப்பாக நான் ஒரு புதிய திறன் அல்லது தலைப்பைக் கற்கத் தொடங்கும் போது, ​​எப்போதும் சாத்தியமானதாகவே உணர்கிறேன். ஆனால் கடக்க வேண்டிய மிகப்பெரிய தடையாக நான் நினைப்பது,மற்றவர்களின் பார்வையில் அஃது என்ற பயம்.அதை சமீபகாலங்களில் எனக்குள் மீண்டும் மீண்டும் உரையாடி தடைகளுக்கான தடை அறிந்து உடைத்து வருகிறேன்.நன்றி ஆழ்மன அறிவியல்.

ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித்துவமான மேதைகள்.

எந்தவொரு நிறுவனத்திற்கும் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தேய்மானத்தை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய மதிப்பு இயக்கி ஆகும். சரியான வேலைக்கு சரியான நபரை நீங்கள் நியமிக்க வேண்டும். "ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித்துவமான மேதைகள்" ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைக்கும் சரியானவர்கள் அல்ல. சரியான நபரை சரியான பணியில் ஈடுபடுத்துவது வெற்றியின் அடித்தளம் மற்றும் சிறந்த அணியை உருவாக்க நினைக்கும் போது வரும் இடர்பாடுகள் நாம் அனைவரும் அறியாதது.அவற்றை சரி செய்யும் ஆற்றலை இயற்கை நமக்கு அழகான தருணங்களாக மாற்றி அமைக்க புது புது நினைவூக்கி வடிவம் தருவது நாம் வாழ்வில் பெற்ற வரம்.நன்றி ஆழ்மன அறிவியல்.
#paypetechnologies

நுகர்வோர் வாடிக்கையாளர் கலாச்சாரம்.

இந்தியாவின் நுகர்வோர் வாடிக்கையாளர் கலாச்சாரம். வங்கியின் பரிவர்த்தனைகள் மற்றும் பயன்பாடுகள் தற்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது.இதில் பணம் இல்லா பரிவர்த்தனை சமீப ஆண்டுகளில் பல உச்ச நிலைகளை அடுத்த அடுக்கு நிலைக்கு எடுத்து சென்று உள்ளது.வங்கிகளின் இணைப்புக்கு பிறகும் சில தனியார் வங்கிகளின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது.தற்போதைய வங்கிகளின் இருப்பு வங்கிகளுக்கு இடையே ஒரு போட்டி நிலையை உருவாக்கி வருகிறது.அடுத்த 5 ஆண்டுகள் பொதுத்துறை வங்கிகளுக்கு சவால்கள் நிறைந்த வருடங்கள் ஆகும்.அது போன்று இன்றைய தலைமுறை வைப்பு நிதி விசயத்தில் கவலை அளிக்க கூடிய வகையில் தான் முதலீடு செய்துள்ளனர்.வங்கி சாராத பிற முதலீடுகளில் இன்றைய தலைமுறை அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் பல பொதுத்துறை வங்கிகள் கலக்கம் அடைய தொடங்கி உள்ளது.

#rameshmuthuvel
#paypetechnologies

மாற்றம் அடையாத எந்த சூழலும் பரிமாற்றம் அடைவது இல்லை.

எல்லோருக்கும் விடிகின்ற வானம் தான் இவருக்கும்.அனைவருக்கும் கிடைக்க பெற்ற வரம் தந்த தாய்,தந்தை தான் இவருக்கும்,வானிலை,கால சூழல்,அர்ப்பணிப்பு,திட்டமிடல்,அதற்கான நகர்வு இவைதான் மாற்றம்,இந்த புரிதலை உள்வாங்கி அவர், அவர் உள்ளதின் உளவியலை இயக்க தெரிந்த மனிதன் மற்றவர்களுக்கு பிரம்மிப்புமிக்க மானுடன் ஆகிறான்.அந்த வகையில் சுந்தர் பிச்சை தன்னிகரற்ற ஒரு வரம்.ஆனால் அதே போன்று நாம் எல்லா குழந்தைகளையும் ஆக்க முயற்சிக்க வேண்டாம்.மாற்றம் அடையாத எந்த சுழலும் பரிமாற்றம் அடைவது இல்லை.நாம் அனைவரின் பிறப்பும், இறப்பும்,ஒரு திட்டமிடல் தான்.நாம் ஒருவரை பின்பற்றும் போது மந்தையாகவும்,உள்ளத்தின் உளவியோலோடு பயணிக்கும் போது பிரமிப்புமிக்க மானுடனாக மாற்றம் அடைகிறோம்.

Saturday, May 21, 2022

கல்வி

எலோன் மஸ்க்கின் தந்தை  தென்னாப்பிரிக்கா-மணியில் ஒரு எமரால்டு சுரங்கத்தை வைத்திருக்கிறார்

ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 300,000 டாலர்களுடன் தொடங்கினார்

பில் கேட்டின் அம்மா IBM இன் தலைமை நிர்வாக அதிகாரியாக அதே குழுவில் அமர்ந்து அவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்க வாய்ப்பு வழங்கினார்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் மார்க் ஜூகர்பெக் படித்துக் கொண்டிருந்தார். அவர் பேஸ்புக்கில் கவனம் செலுத்துவதை கைவிடவில்லை,மேலும் அவர் வேலை செய்யும் அமைப்பைக் காட்ட அவருக்கு பல்கலைகழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது

வாரன் பஃபெட் ஒரு முதலீட்டு நிறுவனம்-குடும்பப் பின்னணியை வைத்திருந்த ஒரு சக்திவாய்ந்த காங்கிரஸ்காரரின் மகன்.

உண்மை என்னவென்றால், எந்த தொடர்பும் இல்லாதவர், பணம் இல்லாதவர், குடும்ப ஆதரவு அல்லது வேலை செய்யும் அமைப்பு இவை அனைத்தும் இல்லாத ஒருவரால் அதை உருவாக்குவது கடினம்.

Dangot கூட ஒரு ஏழை வீட்டில் வாழ்ந்தது இல்லை. அவரது தாத்தா, டான்டாடா ஒரு காலத்தில் நைஜீரியாவில் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார்- அறக்கட்டளை வைத்து நடத்தியவர்.

எனது கருத்து என்னவென்றால், உங்களிடம் உள்ள ஒரே விஷயம் கல்வி மட்டுமே, "உலகப் பணக்காரர்களில் பெரும்பாலோர் பள்ளியை விட்டு வெளியேறியவர்கள்" (School dropout)என்று ஏன் உங்களைத் தூண்டுகிறார்கள்?

முதலாவதாக, உலகப் பணக்காரர்களில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே இடைநிறுத்தப்பட்டவர்கள் ஆனால் அமைப்பு எப்படி இருக்கிறது, அவர்கள் எதற்காக வெளியேறுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?

மார்க் ஜுக்கர்பெக் ஃபேஸ்புக்கை உருவாக்கியதால், அதைக் காட்சிப்படுத்த அவருக்கு ஒரு தளம் கொடுக்கப்பட்டதால், அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது என்பதற்காக அவர் வெளியேறினார். கேரிஓவர் அல்லது மோசமான நடத்தை, அல்லது பள்ளி கட்டணம் போன்றவற்றின் காரணமாக அவர் வெளியேறவில்லை.

அவர்கள் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டனர். அவர்கள் பல்வேறு வகுப்புகளில் பிரகாசமானவர்களில் ஒருவராக இருந்தனர். யூனிபெனில் ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏராளமான கேரிஓவர்களை பேக் செய்ய நீங்கள் கூடையைப் பயன்படுத்துகிறீர்கள், மேலும் ஹார்வர்டில் இருந்து வெளியேறிய புத்திசாலித்தனமான மனிதர்களின் கதையுடன் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறீர்களா?

பார், உன்னிடம் இருப்பது கல்வி மட்டுமே. அதைச் சிறப்பாகச் செய்ய உங்களால் முடிந்தவரை ஏன் முயற்சி செய்யக்கூடாது? கல்வி மிகவும் முக்கியமானது, அது மோசடி அல்ல. நீங்கள் பள்ளிப் படிப்பில் இருந்து மட்டும் கல்வி பெறவில்லை. நீங்கள் புத்திசாலித்தனமான நபர்களை இணைக்கிறீர்கள், நண்பர்களை உருவாக்குகிறீர்கள், மேலும் பள்ளியில் படிக்கும்போது வாய்ப்புகளுக்கு நீங்கள் இன்னும் அதிகமாகத் திறந்திருக்கிறீர்கள். நீ ஏன் இப்படி இருக்கிறாய்?

கவனம், அன்பே.

உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை,

உங்களிடம் பணம் இல்லை, குடும்ப ஆதரவு இல்லை,

உங்களிடம் வேலை செய்யும் அமைப்பு இல்லை,

ஆனால், உன்னிடம் இருப்பது கல்வி மட்டும்தானே, அதை பொருட்படுத்துகிறாயா? உண்மையில்?

Monday, May 9, 2022

Book

The necessity of reading is like the movements of the breath of the heart tube.Reading is a wonderful art that pushes our thoughts from page to page and separates us from the subconscious mind.Let's read and grow.The book is not entertainment but treasure.

 Krishna M.A.RameshMuthuvel.

புத்தகம்

வாசிப்பின் அவசியம் என்பது இதய குழாயின் சுவாசத்தின் அசைவுகளை போன்று.பட பட என்று பக்கத்துக்கு பக்கம் நம் எண்ணங்களை ஆழ் மனதில் இருந்து பிரித்து உந்தி உலா வரும் ஒரு அற்புதமான கலை.வாசிப்போம் வளர்ச்சி பெறுவோம் புத்தகம் பொழுதுபோக்கு அல்ல பொக்கிஷம்.

Krishna M.A.RameshMuthuvel.

Sunday, May 8, 2022

A CEO is just looking for answers to questions on the start-up path. Selects the question for answers after the path is clear.

ஒரு தலைமை நிர்வாகி தான் தொடக்க பாதையில் வினாக்களுக்கு விடை தேடுகிறான். பாதை தெளிவான பிறகு விடைகளுக்கு வினாவை தேர்வு செய்கிறான்.

CEO

ஒரு தலைமை நிர்வாகி தான் தொடக்க பாதையில் வினாக்களுக்கு விடை தேடுகிறான். பாதை தெளிவான பிறகு விடைகளுக்கு வினாவை தேர்வு செய்கிறான்.

Friday, May 6, 2022

நொடி அல்ல கண நேரத்தில் கடக்கிறது வாழ்க்கை.இருப்பின் இருப்பை உணரமுடிவது இல்லை.

நொடி அல்ல கண நேரத்தில் கடக்கிறது வாழ்க்கை.இருப்பின் இருப்பை உணரமுடிவது இல்லை.