This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, January 19, 2014

எல்லாமே ஏக்கம் தான் ....!!!

மழைக்காக ஏங்குகிறது
விவசாயம் ....!!!
மின்சாரத்துக்காக ஏங்குகிறது
தொழிற்சாலை ...!!!
பேரூந்தின் வரவுக்காக ஏங்குகிறது
பயணியின் மனம் ....!!!
மகனின் கடிதத்துக்காக ஏங்குகிறது
தாயின் மனம் ....!!!
அப்பாவின் பொம்மைகாக ஏங்குகிறது
குழந்தையின் மனம் ...!!!
காதலுக்காக ஏங்குகிறது
இளவயது மனம் ....!!!

மாற்றம் வேண்டுமாம்?

எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!

உயிரின் பாசம் !!!

இங்கு இருக்கும்,
 மனிதத்திற்கு,
 தெரியாமல்,
ஒவ்வொரு,
இடமாக செல்கிறேன்.
அடைபட்டு,
 இருக்கும்,
பறவைகளையும்,விலங்குளையும்.
சுதந்திரம்,
கொடுக்க,
 அந்த உயிரினங்கள்,
 என்றெனும்,
நினைத்து பார்க்கும்,
 சுதந்திரம்,
கொடுத்த,
 என்னை,
 அவைகள்,
மனிதம் அல்ல,
மறந்து போவதற்கு!!!!!!!!!

மாயன் சொன்னதுபோல்

மாயன் சொன்னதுபோல்
உலகம் அழிந்திருந்தால்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நீ கட்டிய நட்சத்திர வீட்டில் -நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்..!
ஏ இதயனே இது மெய்தானா?
ஏ கண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருக்கும் என்பதற்காக நான்
பாயாக இப்போது கூட இருப்பதை நடக்கிறது
உனக்கு தெரியாமல் ....!
உயிரே நான் உன்னை உயிராகவே
நினைக்கிறேன்.....!

காதல் மொழியிருக்கும் வரை !!!

கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.
நீ கற்றுத்தந்த மொழியால்
கற்றேன்
உன்னோடு காதலில்
விழுந்த என் இதயத்துக்கு
கவிதை எழுத
கற்று தந்தது
உன் இனிமையான காதல் மொழிகள் .
காதல் மொழியிருக்கும் வரை நம்
காதலும் இருக்கும் ....
கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....

நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
பட்டகடனை திருப்பி
செலுத்துவதுதானே
பிள்ளை செலுத்த வேண்டிய பணி ..
இப்போ நீங்கள் ஊர் சுற்றிப்பார்க்க
நான் உங்களுடன் நடக்கிறேன்
மெது மெதுவாக ...!
நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

ஒரு கல்லூரி கதை

வாழ்க்கையில் பல ஆண்டுகள்
பள்ளிப்பருவகாலம் .....
புள்ளி மான்கள் துல்லித்துரியும்
பள்ளிப்பருவகாலத்தில் ....
முடிந்தபின் புள்ளிமானின்
புள்ளிகளைப்பார்த்தால் ....
பல புள்ளிகளில் ......
ஒருதலைக்காதல் ......
ஒழிந்திருக்கும் ....
கல்லூரி(பல்கழைக்கழகம் ) மாணவர்களே ....
நன்றாக சிறகடித்து கொள்ளுங்கள்
இந்த கல்லூரி காலம் .....
சில ஆண்டு மட்டும் தான்....
முடிந்த பின் ஒடிந்த ஒவ்வொரு
சிறகையும் எடுத்து பாருங்கள்
ஒவ்வொரு சிறகிலும்
ஒரு கல்லூரி கதை
எழுத பட்டிருக்கும்......

உண்மைக்காதல் ....!

காதல் மழை எல்லோர் மீதும் ..
பொழிகிறது ....
வெளியே போனால் சுரம்
பிடிக்கும் என்று இருந்தால்
ஒருதலைக்காதல்.....!
முழுக்க நனைந்தால் ...
காமக்காதல்...!
மழையை பொருட்படுத்தாமல்...
நனைந்து சென்றால்...
உண்மைக்காதல் ....!

முடியவில்லை ...

காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முடியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை .....!

நானும் ஓர் அகதி தான்...

வானத்தில் அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் காதல் தேசத்தில்
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...