This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, January 19, 2014

மாயன் சொன்னதுபோல்

மாயன் சொன்னதுபோல்
உலகம் அழிந்திருந்தால்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நீ கட்டிய நட்சத்திர வீட்டில் -நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்..!
ஏ இதயனே இது மெய்தானா?
ஏ கண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருக்கும் என்பதற்காக நான்
பாயாக இப்போது கூட இருப்பதை நடக்கிறது
உனக்கு தெரியாமல் ....!
உயிரே நான் உன்னை உயிராகவே
நினைக்கிறேன்.....!

காதல் மொழியிருக்கும் வரை !!!

கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.
நீ கற்றுத்தந்த மொழியால்
கற்றேன்
உன்னோடு காதலில்
விழுந்த என் இதயத்துக்கு
கவிதை எழுத
கற்று தந்தது
உன் இனிமையான காதல் மொழிகள் .
காதல் மொழியிருக்கும் வரை நம்
காதலும் இருக்கும் ....
கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....

நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
பட்டகடனை திருப்பி
செலுத்துவதுதானே
பிள்ளை செலுத்த வேண்டிய பணி ..
இப்போ நீங்கள் ஊர் சுற்றிப்பார்க்க
நான் உங்களுடன் நடக்கிறேன்
மெது மெதுவாக ...!
நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

ஒரு கல்லூரி கதை

வாழ்க்கையில் பல ஆண்டுகள்
பள்ளிப்பருவகாலம் .....
புள்ளி மான்கள் துல்லித்துரியும்
பள்ளிப்பருவகாலத்தில் ....
முடிந்தபின் புள்ளிமானின்
புள்ளிகளைப்பார்த்தால் ....
பல புள்ளிகளில் ......
ஒருதலைக்காதல் ......
ஒழிந்திருக்கும் ....
கல்லூரி(பல்கழைக்கழகம் ) மாணவர்களே ....
நன்றாக சிறகடித்து கொள்ளுங்கள்
இந்த கல்லூரி காலம் .....
சில ஆண்டு மட்டும் தான்....
முடிந்த பின் ஒடிந்த ஒவ்வொரு
சிறகையும் எடுத்து பாருங்கள்
ஒவ்வொரு சிறகிலும்
ஒரு கல்லூரி கதை
எழுத பட்டிருக்கும்......

உண்மைக்காதல் ....!

காதல் மழை எல்லோர் மீதும் ..
பொழிகிறது ....
வெளியே போனால் சுரம்
பிடிக்கும் என்று இருந்தால்
ஒருதலைக்காதல்.....!
முழுக்க நனைந்தால் ...
காமக்காதல்...!
மழையை பொருட்படுத்தாமல்...
நனைந்து சென்றால்...
உண்மைக்காதல் ....!

முடியவில்லை ...

காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முடியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை .....!

நானும் ஓர் அகதி தான்...

வானத்தில் அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் காதல் தேசத்தில்
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...

ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

நான் திரிந்த பாதை ...
 நான் ரசித்த பாதை ...
 அழகான இருபுறமும் ...
 அடர்ந்த மரங்கள் ...
 கணவன் மனைவிபோல் ...
 உயரமான குட்டையான அருகருகே ..
 மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..

உரசும் ஊடல் ...!!!

தரையில் வண்ண வண்ண பூச்சிகள் ..
 இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ...
 சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..

இப்போ ....!!!

இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ...
 ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ...
 ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

சுதந்திரத்தை பற்றி ...

சுதந்திரத்தை பற்றி ...
 கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ...
 முற்றத்தில் வந்து விழுந்த்தது ...
 காகங்களால் கொத்தப்பட்ட ...
 குருவியொன்று ....!!!

எடுத்த குருவியை ...
 மெதுவாக வருடி ...
 முடிந்தளவு பாதுகாத்து ...
 பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ...
 வேண்டாமப்பா ..நிறுத்துங்க ..
 அதை கூட்டில் வளர்ப்போம் ..
 தடுத்தான் செல்ல மகன் ...!!!

வேண்டாம் மகனே ...
 அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது ..
 பறக்க விட்டேன் குருவியை ..!!!

வாடா மகனே ....
 வெளியில் நிற்காதே ...
 பொல்லாத உலகமடா இது ...
 கூறியபடி மகனை அடைத்தேன் வீட்டுக்குள் ..!!!

சுவரில் கிறுக்காதே ....

சுவரில் கிறுக்காதே ....
 விளையாடும் குழந்தைகளின் ...
 தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
 தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
 வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
 ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
 இன்று நவீன சித்திரம் என்று ...
 கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
 எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
 நம்வீட்டில்.....???
 நம்பிக்கை வார்த்தை ...!!!