Saturday, December 14, 2013

ஒரு கண் போதும்.-

* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது.
ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.
*****************
இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
- கொரியா.
*****************
வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.-
டச்சுப் பழமொழி.
******************
தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.
-பிரான்ஸ்.
******************
மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
-இங்கிலாந்து.
*****************
மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
-இங்கிலாந்து.
*****************
கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -
ஜெர்மன்.
**************
அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.
- ஜெர்மனி.
**************
பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
-இத்தாலி.
************
ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில்
அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.

0 comments: